» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தற்கொலை : நிதிநிறுவன ஊழியர்கள் மீது கணவர் புகார்

சனி 2, ஜூலை 2022 8:05:43 AM (IST)



மனைவியின் இறப்புக்கு காரணமான நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பியிடம் கணவர் புகார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. பெயிண்டர். இவர் நேற்று தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 2 மனைவிகள். 2 பேரும் சேர்ந்து சிறுதொழில் செய்வோருக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கொடுத்து வந்தனர். கடன் பெற்று செல்பவர்களிடம் தினமும் காலையில் பணத்தை வசூல் செய்து நிதிநிறுவனத்தில் செலுத்தி வந்தனர். 

இந்நிலையில் கடந்த வாரத்தில் 2-வது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டில் வந்து கடனை வசூலிப்பதற்காக எனது முதல் மனைவியை மனதளவில் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவர் விஷம் குடித்து இறந்து விட்டார். எனது மனைவியின் இறப்புக்கு காரணமான நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory