» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிணையை மீறி குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை
புதன் 29, ஜூன் 2022 6:34:18 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த கருத்தபாண்டி என்பவரது மகன் முத்துக்குமார் என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கடந்த மே 16 ம் தேதி அன்று கோவில்பட்டி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தில் முத்துகுமாரிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு வருட காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து அன்றைய தினமே பிணை பத்திரம் எழுதி பெறப்பட்டது.
ஆனால் பிணைப்பத்திர காலம் முடிவதற்குள் கடந்த 22 ம் தேதி அன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் பகுதி அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் முத்துகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முத்துகுமாரை வரும் 15.05.2023 வரை சிறையில் அடைக்க தண்டனை வழங்கி கோவில்பட்டி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.