» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் எலக்ட்ரிக்கல் கடையில் மின் மோட்டார் பம்பை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் சதீஷ்குமார் (32) என்பவர் திருச்செந்தூர் சபாபதிபுரம் தெரு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் கடையில் இல்லாத நேரம் அங்கு வந்த மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் பாலகுரு (37) என்பவர் சதீஷ்குமாரின் கடையில் எலக்ட்ரிக்கல் மோட்டார் பம்பை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பெயரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ் மோகன் காந்தி வழக்கு பதிவு செய்து பாலகுருவை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 3,000 மதிப்பிலான மின் மோட்டார் பம்பையும் பறிமுதல் செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)

தூத்துக்குடியில் விதிகளை மீறும் கனரக வாகனங்கள்; போக்குவரத்து நெரிசல் - மாணவர்கள், பொதுமக்கள் அவதி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:14:18 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)

பைக்குகள் மோதி விபத்து: பிளஸ் 1 மாணவா் பலி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:26:38 AM (IST)
