» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ கவிழ்ந்து விபத்து: பெண் பரிதாப சாவு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:51:02 PM (IST)
தூத்துக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தை சேர்ந்த அழகர் என்பவரின் மனைவி முனியம்மாள். இவரது உறவனரான பராசக்தி என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு அவரை பார்க்க முனியம்மாள் சென்றார். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து பூசனூர் கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன்(32) என்பவர் ஓட்டினார்.
குளத்தூர் கல்லூரி அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது திடீரென்று நிலைதடுமாறி சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த மணல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.