» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே ஹார்டுவேர் கடையில் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 28, ஜூன் 2022 10:47:14 AM (IST)

தூத்துக்குடி அருகே ஹார்டுவேர் கடையின் பூட்டை உடைத்து ரூ.60ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம்  மகன் லிங்கம் (56). இவர்  புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை கடையை திறக்கச் சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பெயிண்ட் டின்கள், எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் உட்பட ரூ.60ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து லிங்கம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory