» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ் பாடத்தில் சாதனை: மாணவிக்கு அமைச்சர் பாராட்டு
வியாழன் 23, ஜூன் 2022 7:56:50 AM (IST)
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ௧௦௦ மதிப்பெண் பெற்ற மாணவி துர்காவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருச்செந்தூர் மாணவி துர்கா தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவி துர்காவிற்கு தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டுவிட்டர் மூலம், மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் மாணவி துர்காவுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாணவியை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியை பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)

kumarJun 23, 2022 - 02:17:28 PM | Posted IP 108.1*****