» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துனை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!
புதன் 22, ஜூன் 2022 11:32:31 AM (IST)
நாசரேத் துணை மின்நிலையத்தில் ஆய்வாளர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூலோகபாண்டி மகன் ஆனந்தபாண்டி (51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துனை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். நேற்று அவர் இரவு பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலையில் பூமிநாதன் என்பவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது ஆனந்தபாண்டி அறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமிநாதன் நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனந்த பாண்டியின் தலை, முதுகு உட்பட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் நேரில் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிணையை மீறி குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை
புதன் 29, ஜூன் 2022 6:34:18 PM (IST)

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

NameJun 23, 2022 - 08:54:16 AM | Posted IP 162.1*****