» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு

ஞாயிறு 15, மே 2022 7:57:33 PM (IST)

தூத்துக்குடியில் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் மின்சாரம் தாக்கியதில் கேசியர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாலை மகன் செல்வராஜ் (51) இவர் மாப்பிள்ளையூரணியிலுள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் கேசியர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று அலுவலகத்தில் டியூப் லைட்டை மாட்டிக் கொண்டிருந்தபோது  திடீரென்று மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory