» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கயத்தாறு அருகே 17 வயது சிறுமி கடத்தல் : பஸ் கண்டக்டருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மே 2022 7:52:12 PM (IST)
கயத்தாறு அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பஸ் கண்டக்டரை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாமி இவரது மகன் ராஜபாண்டி (32). இவர் மினி பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார் இந்த பஸ்ஸில் அடிக்கடி 17 வயது சிறுமி செல்வாராம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அந்த 17வயது சிறுமியை ராஜபாண்டி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி மற்றும் அந்த சிறுமியையும் தேடி வருகிறார்.