» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கயத்தாறு அருகே 17 வயது சிறுமி கடத்தல் : பஸ் கண்டக்டருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 15, மே 2022 7:52:12 PM (IST)

கயத்தாறு அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பஸ் கண்டக்டரை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாமி இவரது மகன் ராஜபாண்டி (32). இவர் மினி பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார் இந்த பஸ்ஸில் அடிக்கடி 17 வயது சிறுமி செல்வாராம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அந்த 17வயது சிறுமியை ராஜபாண்டி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி மற்றும் அந்த சிறுமியையும் தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory