» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீப்பற்றி எரிந்த பைக் : தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 14, மே 2022 11:08:46 AM (IST)
தூத்துக்குடியில் புதிய பஸ் நிலையம் அருகே பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகே நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு மோட்டார் பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் பைக் முழுவதும் எரிந்து விட்டது. எரிந்த பைக் யாருடையது? எப்படி எரிந்தது என்பது குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.