» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலி பத்திர பதிவு புகார்: சார் பதிவாளர் இடைநீக்கம் - சசிகலா புஷ்பா வரவேற்பு
வெள்ளி 13, மே 2022 3:51:29 PM (IST)
தூத்துக்குடியில் விவசாய நிலங்களை போலி பத்திர பதிவு செய்தது தொடர்பான பாஜக புகார் எதிரொலியாக சார் பதிவாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம் பண்ணை, கிராமத்தில் 500 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலத்தை மோசடியாக தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி அருகிலுள்ள புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தினர். தொடர்ந்து சார்பதிவாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறை டிஐஜி கவிதா ராணி விசாரணை மேற்கொண்ட விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து பத்திரப் பதிவாளர் மோகன்தாஸ் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஆளுங்கட்சி செய்த தவறை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
Murugananthamமே 14, 2022 - 01:52:19 PM | Posted IP 162.1*****
That register, vendors,brokers, duplicate land owners are immediately arrest and punished by court otherwise all farmers loss again
அப்படியாமே 14, 2022 - 08:28:47 AM | Posted IP 162.1*****
இடைநீக்கம் பெரிய தண்டனையா ?? பிடிச்சி சிறையில் அடையுங்கள்
Balanமே 13, 2022 - 07:31:19 PM | Posted IP 162.1*****
or broke his hands
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)

கேள்விப்பட்டேன்..மே 15, 2022 - 08:47:25 PM | Posted IP 162.1*****