» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை இழந்தது அதிமுக - நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி!
வியாழன் 12, மே 2022 3:22:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அதிமுக உறுப்பினர்கள் 9பேர் கட்சி மாறி வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் 12 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. கோவில்பட்டியை சேர்ந்த சத்யா என்பவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 12 அதிமுக உறுப்பினர்கள் இருந்தனர். 5 திமுக உறுப்பினர் இருந்தனர். தற்போது 9 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு சென்று விட்டனர். இதனால் திமுகவின் பலம் அதிகரித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்திற்கு மொத்தமுள்ள 17 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த சத்யா மற்றும் உறுப்பினர்கள் பேச்சியம்மாள், பிரியா ஆகிய மூவரைத் தவிர்த்து 14 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.
அதிமுகவைச் சேர்ந்தவரும், துணைத் தலைவருமான செல்வக்குமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். பின்னர் உறுப்பினர்கள் பலரும் கட்சி மாறினர். நம்பிக்கையில்லா தீரமானம் வெற்றி பெற்றது குறித்து துணைத் தலைவர் செல்வகுமார் கூறும்போது "தமிழகத்தில் விடியல் அரசு, திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு பரிசாக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளனர் என்றார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
Makkalமே 12, 2022 - 04:52:06 PM | Posted IP 162.1*****
Ithukku vera pannalam natharikala.
makkalமே 12, 2022 - 04:44:10 PM | Posted IP 162.1*****
தேர்தல் முடிந்த உடனே கட்சி மாறுபவர்கள் பதவியை பறிக்க வேண்டும். மக்களும் அடுத்த தடவை அவர்களை நிராகரிக்க வேண்டும்.
தூத்துக்குடிமே 12, 2022 - 03:33:47 PM | Posted IP 162.1*****
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மீது ஏதேனும் புகார் உள்ளதா
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)

வழி போக்கன்மே 13, 2022 - 05:27:26 PM | Posted IP 162.1*****