» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி ஆசிரியர்களுக்கு ஜன.22ம் தேதி விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
வியாழன் 20, ஜனவரி 2022 5:29:42 PM (IST)
தமிழகத்தில் வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், வருகிற ஜனவரி 22 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)
