» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!

வியாழன் 20, ஜனவரி 2022 1:34:08 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டுராஜன் ,மகன் அலெக்ஸ் (20). 25 வயது இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். 

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அந்த பெண் அவரது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்கு சென்று அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

adaminJan 20, 2022 - 05:12:29 PM | Posted IP 108.1*****

enakku 20 unakku 25

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory