» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!
வியாழன் 20, ஜனவரி 2022 1:34:08 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டுராஜன் ,மகன் அலெக்ஸ் (20). 25 வயது இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அந்த பெண் அவரது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்கு சென்று அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
adaminJan 20, 2022 - 05:12:29 PM | Posted IP 108.1*****