» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாழைத்தார்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் : போலீஸ் வலைவீச்சு!!!
வியாழன் 20, ஜனவரி 2022 1:30:01 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே தோட்டத்தில் 60 வாழைத்தார்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் நடராஜன் (65). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். வாழைகள் குலைதள்ளி இருந்த நிலையில் மர்ம ஆசாமிகள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 60 வாழைத் தார்களை வெட்டி கடத்தி சென்று விட்டார்களாம். இது தொடர்பாக நடராஜன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.