» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாழைத்தார்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் : போலீஸ் வலைவீச்சு!!!

வியாழன் 20, ஜனவரி 2022 1:30:01 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே தோட்டத்தில் 60 வாழைத்தார்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் நடராஜன் (65). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். வாழைகள் குலைதள்ளி இருந்த நிலையில் மர்ம ஆசாமிகள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 60 வாழைத் தார்களை வெட்டி கடத்தி சென்று விட்டார்களாம். இது தொடர்பாக நடராஜன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory