» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கந்துவட்டி கொடுமை: தந்தை - மகன் உள்பட 4பேர் மீது வழக்குப் பதிவு - தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 20, ஜனவரி 2022 11:46:52 AM (IST)

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தனியறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த தந்தை மகன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

தூத்துக்குடி போல் பேட்டை மேற்கு 2-வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி கன்னியம்மாள் (47). இவர் தூத்துக்குடி தனசேகர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மனோகரன் (57) என்பவரிடம் ரூ.20 லட்சம் வார வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாகவும், அதில் ரூ.16 லட்சம் வரை திருப்பி கட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் வட்டி தர தாமதமானதால் ஆத்திரமடைந்த மனோகரன், கன்னியம்மாள் மற்றும் அவருடைய கணவர் வேல்முருகன் மகள் முத்துலட்சுமி ஆகிய  மூன்று பேர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து தனி அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் மனோகரன் அவருடைய மகன் விக்னேஷ் (24), அண்ணன் ஜெயசீலன், அவரது மகன் அஜய் (45), மற்றும் ஜெயசீலன் மனைவி குப்பம்மாள் (62) ஆகியோர் மீது சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் கந்துவட்டி கொடுமை கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory