» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருங்குளம் அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி!

வியாழன் 20, ஜனவரி 2022 11:39:52 AM (IST)

கருங்குளம் அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார் 

சென்னை, மணலி மடத்தூர் காலனியை சேர்ந்தவர் வேதநாயகம் மகன் மோகன்ராஜ் (55). இவர் நெல்லை டவுனில் உள்ள தனது மருமகன் வீட்டுக்கு வந்து பைக்கில் வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நெல்லை - திருச்செந்தூர் பிரதான ரோட்டில் பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory