» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் குழுவில் வாங்கிய ரூ.7 லட்சம் கடனை கட்ட முடியாததால் இளம்பெண் தற்கொலை!
வியாழன் 20, ஜனவரி 2022 11:33:02 AM (IST)
குலசேகரப்பட்டினத்தில் மகளிர் குழுவில் வாங்கிய ரூ.7 லட்சம் கடனை கட்ட முடியாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஜெயராணி (42) மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். ஆனால் அவரால் பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லையாம்.
இதனால் மகளிர் குழுவினர் ஜெயராணி வீட்டில் வந்து பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயராணி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.