» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்டெய்னர் பெட்டியில் அடைத்து வைத்து இளைஞர் மீது தாக்குதல் - போலீஸ் விசாரணை!

வியாழன் 20, ஜனவரி 2022 10:31:16 AM (IST)



தூத்துக்குடியில் கண்டெய்னர் பெட்டியில் அடைத்து வைத்து இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் வாலிபர் ஒருவரை பிடித்து வைத்து கண்டெய்னர் பெட்டியில் அடைத்து வைத்து இரவு முழுக்க கை கால்களை கட்டி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு இன்று காலை மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த மத்திய பாகம் போலீசார் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் கணேசன் நகரைச் சேர்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம் (17) என்பதும், அவரை தாக்கியவர்கள் கோரம்பள்ளம், அய்யனடைப்பு கலோப் மகன் சாம் குவிங்ஸ் (37), தாளமுத்து நகர், கணபதி நகர் கணேஷ் மகன் சுரேஷ், ஜாகிர் உசேன் நகர் பொன்மாடசாமி மகன் கஜேந்திரன் (18) எனத் தெரியவந்தது. அவர்கள் என் மாரி செல்வத்தை தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory