» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒருதலைக்காதல் தோல்வியில் முடிந்ததால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 19, ஜனவரி 2022 11:11:34 AM (IST)

தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் தோல்வியில் முடிந்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, லயன்ஸ் டவுன், அன்னை தெரசா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மகன் ஷெரீப் (26). இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தாராம். ஆனால் இவரது காதலை அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லையாம். 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இவர் தூத்துக்குடி பெரிய கடைத் தெருவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். ஷெரீப் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து

RajaJan 19, 2022 - 04:56:35 PM | Posted IP 108.1*****

Rip Bro

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory