» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் வாலிபர் கைது!

சனி 25, செப்டம்பர் 2021 11:28:52 AM (IST)

விளாத்திகுளம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் (24). இவர்  15 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கலா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory