» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதல்: வாலிபர் பலி - மற்றொருவர் காயம்
வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:38:43 PM (IST)
தூத்துக்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பொன்மாடசாமி (23). இரும்பு கடை தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் அசோக் குமார் (16). இவர்கள் இருவரும் இன்று மாலை ஒரே பைக்கில், சோழபுரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு மீண்டும் புதியம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வெள்ளாரம் - குமரெட்டியாபுரம் ஒடுபாலத்தின் அருகே வரும்பொழுது, எதிரே மஞ்சநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் கருப்பசாமி (25), என்பவர் வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த பொன் மாடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த கருப்பசாமி ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.