» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தூய்மை பணிகள்
வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:28:23 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
தூய்மை பாரத திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணிகள் மற்றும் வர இருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் செம்மைப்படுத்தப்பட்டன. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் சீர் செய்யப்பட்டன.
கல்லூரி வளாகத்தில் உடைந்த மற்றும் பழுதான நிலையில் இருந்த மரக்கிளைகள் தேவையற்று கிடந்த குப்பைகள் மற்றும் பொருட்கள் அகற்றப்பட்டன. திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் கல்லூரி மாணவ,மாணவியர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். இப்பணிகளை முதல்வர் சொ.வீரபாகு தலைமையில், நாட்டுநலப் பணித் திட்ட மாணவ,மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.