» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள்விழா: அமைச்சர், எம்பி மரியாதை

வெள்ளி 24, செப்டம்பர் 2021 11:52:49 AM (IST)



வீரபாண்டியன்பட்டினத்தில் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தினத்தந்தி குழும உரிமையாளரும், முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாள் விழா, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள மணிமண்டபத்தில், அரசு சார்பில் இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நம்முடைய அன்பிற்கும், மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய புகழ் நீடுளி வாழ வேண்டும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மீது நீங்காத பற்றும் பாசமும் கொண்டிருக்கிற ஒருவராக திகழ்ந்தார். 

மேலும் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து அவருடைய திறமையை முழுமையாக போற்றக்கூடியதாக ஒருவராக பா.சிவந்தி ஆதித்தனார் இருந்திருக்கிறார்கள். அவருடைய பங்களிப்பு பல்வேறு துறைகளின் இருந்தன, பத்திரிக்கை துறையிலும் மிக அதிக ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்கள். விளையாட்டு துறை மற்றும் பல்வேறு துறையில் இருக்கக்கூடியவர்கள் இன்று புகழ் பெற்ற சாதனையாளர்களாக உருவாவதற்கு அவருடைய அந்த நம்பிக்கை, அவருடைய தூண்டுதல், அவருடைய பேணுதல் இதுதான் காரணமாக இருந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

விழாவில்  மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கோகிலா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங்,  வட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, முத்துகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், முக்கிய பிரமுகர்கள் செங்குளிரமேஷ், ராமஜெயம் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory