» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்
வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:54:50 AM (IST)
தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக உள்ள தாளமுத்துநகர் பஜார் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தாளமுத்துநகர் பகுதியில் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கூலித் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் பெரும்பகுதியாக கூடியிருக்கும் இந்த பகுதி மக்கள் வந்து செல்லும் தாளமுத்து நகர் பிரதான சாலை உடைந்து மக்கள் நடப்பதற்கு வாகனத்தில் பயணிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதையடுத்து ஜல்லி மட்டும் அடித்து ஒரு பகுதி சாலை முருகன் தியேட்டர் இருந்து ராஜபாளையம் வரை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் இரு புறங்களும் பெரும் பலமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களின் விழுந்து செல்லும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே சங்கரன் தலைமையில் தாளமுத்துநகர் பஜாரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தாளமுத்து நகர் கிளைச் செயலாளர் ஐயப்பன், எம்ஜிஆர் நகர் கிளை செயலாளர் ஜெகதீஸ்வரன், பாலதண்டாயுதம் நகர் கிளை செயலாளர் கண்ணன், மேட்டுப்பட்டி கிளை செயலாளர் பாலமுருகன், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம், ஆட்டோ ஓட்டுனர் சங்க பொறுப்பாளர்கள் சுதர்சன், வேலுச்சாமி, முனிஸ்வரன், முத்துமாலை, பிச்சையாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.