» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரத் பந்த்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் பிரசாரம்

வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:47:30 AM (IST)



வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள செப்.27ல் பாரத் பந்த்துக்கு ஆதரவாக விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  தூத்துக்குடி மாவட்டத்தில் செப்20 முதல் நான்கு நாட்கள் நடத்தி வருகிறது. திருச்செந்தூரில் துவங்கிய  விவசாய சங்க தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜி.ராமசுப்பு, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான பிச்சார குழு நேற்று தூத்துக்குடி வந்தது. வகித்தனர். 

இதையடுத்து பிரச்சார இயக்கத்தினருக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் பஜாரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி கதிர்வேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் செயலாளர் ரசல், மாவட்ட நிர்வாகிகள் முருகன், காசி, பெருமாள், லேனஸ் ஐஎன்டியுசி சார்பில் மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், சந்திரசேகர், ஏஐடியுசி சார்பில் கிருஷ்ணராஜ், ஏஐசிசிடி யு சார்பில் மாவட்ட தலைவர் சகாயம், மாவட்டச் செயலாளர் சிவராமன், முருகன் உட்பட தொழிற் சங்கங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory