» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிலத்தகராறில் கணவன், மனைவிக்கு கத்திக்குத்து: 4பேருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 22, ஜூன் 2021 9:30:04 PM (IST)
பழையகாயல் அருகே நிலத்தகராறில் கணவன், மனைவியை கத்தியால் குத்திய 4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளி மேலத் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (53).இவருக்கு முத்தாறு என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது தம்பி பழனிவேல் இதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த 2 குடும்பத்தினர் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று சின்னச்சாமியும் அவரது மனைவியும் வீட்டிற்கு பின்புறத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை அறிந்த பழனிவேல், மற்றும் அவரது மகன்கள் அருள், தெய்வேந்திரன், விஷ்ணு, ஆகியோர் சின்னச்சாமியிடம் பாகப்பிரிவினை செய்யாத நிலையில் எப்படி வேலி அமைக்கலாம் என கூறி தகராறு செய்து, சின்னசாமியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தி கம்பால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், அவரது மகன்கள் அருள், தேவேந்திரன், விஷ்ணு ஆகிய 4 பேரையும் தேடிவருகிறார்.