» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று : 289 போ் குணமடைந்தனர்.
செவ்வாய் 22, ஜூன் 2021 9:21:11 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தொற்றிலிருந்து 289 போ் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,744 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 289 போ் இன்று குணமடைந்தனர். இதுவரை கரோனாவிலிருந்து 52237பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை 367 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1153 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.