» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் திருடும் கும்பல் நடமாட்டம் : பொதுமக்கள் புகார்
வியாழன் 8, ஏப்ரல் 2021 10:12:40 AM (IST)
சாத்தான்குளத்தில் பைக் திருடும் கும்பல் நடமாடி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் நாளுக்கு நாள் பைக் உள்ளிட்ட இதர வாகனகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அத்தியாவசிய பொருளாகவும் மாறி வருகிறது. சாத்தான்குளத்தில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் கையில் 10க்கு மேற்பட்ட சாவியுடன் வந்துள்ளார். தச்சமொழி உள்ள ஹோட்டல் அருகில் நின்ற பைக் ஒன்றை கள்ள சாவி போட்டு அவர் எடுத்து செல்ல முயன்றதாக கூறபப்படுகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவரை விசாரித்தில் அவர் நெல்லை மாவட்டம் சேர்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
உடன் பொதுமக்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிித்துள்ளனர். கடந்த 6மாத்திற்கு முன்பு சாத்தான்குளம் பகுதியிலும், கடந்த 2மாத்திற்கு முன்பு பேய்க்குளம் பகுதியிலும் பைக் திருட்டு நடந்துள்ளது. அதில் பொதுமக்கள் பைக் திருடர்கள் சிலரை போலீஸாரிடம் பிடித்தும் கொடுத்துள்ளனர். ஆதலால் பைக் திருட்டு நிகழாமல் இருக்க போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)
