» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது : தூத்துக்குடியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
புதன் 7, ஏப்ரல் 2021 12:22:41 PM (IST)
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவரும், அக்கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இதுபோன்ற தோ்தலை நான் சந்தித்தது கிடையாது.
இது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பிடித்துக் கொடுத்தால் கூட அவா்களை விட்டு விட்டு பிடித்து கொடுப்பவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது. வாக்குரிமை சுதந்திரம் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க கூடாது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)

ARASAMUTHUApr 7, 2021 - 01:00:45 PM | Posted IP 162.1*****