» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வெள்ளி விழா: புதிய கிளையை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்
வியாழன் 21, ஜனவரி 2021 4:24:34 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வெள்ளி விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் புதிய கிளையை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் ராஜீவ் நகர் கிளை திறப்பு விழா, மற்றும் 25வது ஆண்டு வெள்ளிவிழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் வரவேற்புரையாற்றினர்.
புதிய கிளையை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குத்துவிளக்கு ஏற்றினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)

தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)
