» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாப சாவு
செவ்வாய் 1, டிசம்பர் 2020 4:34:43 PM (IST)
கழுகுமலை அருகே குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளம் கிராமம் சின்ன காலனியைச் சேர்ந்தவர் செல்வபெருமாள். இவரது மகன் சுரேஷ் (10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கரடிகுளத்தில் குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்கு சென்றதாகத் தெரிகிறது.
இதனால் நீரில் மூழ்கிய சுரேஷை, அவனது நண்பன் கரன் என்ற சிறுவன் காப்பாற்ற முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனைப் பார்த்த அப்பகுதியினர் 2பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அப்போது நீரில் மூழ்கிய சுரேஷ், உயிரிழந்து விட்டது தெரியவந்து. மேலும் கரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குக் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றரன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
