» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முழுவதும் 120 இடங்களில் காவல் சோதனை : எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2020 11:32:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் சென்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி நகரத்தில் மட்டும் 35 இடங்களில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பணிகள் செல்வதைத் தவிர்த்து மற்றவர்களின் வாகனங்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியில் வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சோதனை பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து வரக்கூடிய மற்ற வாகனங்கள் வழக்குப்பதிவு செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல்துறையினர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மாநகர காவல்துறை சட்ட ஒழுங்கு டி.எஸ்.பி கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், போக்குவரத்து காவல் துனை ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
