» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காசில்லாபரிவர்த்தனை மூலம் வரிகள் செலுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
வியாழன் 11, அக்டோபர் 2018 6:35:22 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரிகள் செலுத்த காசில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியானது ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையில் காசில்லா பணபரிவர்த்தனை முறையினை பொதுமக்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் மாநகராட்சியால் திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினங்களை காசில்லா பணபரிவர்த்தனை மூலம் செலுத்துவதற்கான வசதி மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அனைத்திலும் எஸ் பேங்க் மூலம் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வரிவசூல் மையங்களில் எஸ் பேங்க் மூலம் ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை தற்போதைய நவீன உலகில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவுரை பணபரிமாற்ற முறைகளான QR code, Unified Payment Inter face, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் Bharath Bill Payment system ஆகியவற்றின் மூலமாகவும் வரிவசூல் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வருகின்ற 15.10.2018 முதல் எஸ் பேங்க் மூலம் மாநகராட்சி வரி வசூல் மையங்களை நவீனப்படுத்துதல் தொடர்பான பணிகள் துவங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மேற்படி சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ்,தெரிவித்தார்.

மேற்படி வரிவசூல் மையங்களில் எஸ் பேங்க் மூலம் ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை தற்போதைய நவீன உலகில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவுரை பணபரிமாற்ற முறைகளான QR code, Unified Payment Inter face, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் Bharath Bill Payment system ஆகியவற்றின் மூலமாகவும் வரிவசூல் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வருகின்ற 15.10.2018 முதல் எஸ் பேங்க் மூலம் மாநகராட்சி வரி வசூல் மையங்களை நவீனப்படுத்துதல் தொடர்பான பணிகள் துவங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மேற்படி சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ்,தெரிவித்தார்.
மக்கள் கருத்து
காதர்Oct 12, 2018 - 11:06:55 AM | Posted IP 172.6*****
என்ன ஆனாலும் ரோடு மட்டும் போடமாட்டோம் - மாநகராட்சி
ஒருவன்Oct 12, 2018 - 12:35:09 AM | Posted IP 141.1*****
அது சரி.. ஆன்லைன் மூலமா பணம் செலுத்தும் வசதி பெற்றால் வீட்டில இருந்து செலுத்தலாம் ...
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)

nagarajOct 12, 2018 - 07:04:57 PM | Posted IP 141.1*****