» செய்திகள் » வெளிநாடு

Share

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

புதன் 28, ஜூலை 2010 12:44:53 PM (IST)

அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. உயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன. மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads