» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகாங்க் மாகாணத்திற்கு உட்பட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள மொத்தம் 64 மாவட்டங்களில், சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்கள் தற்போது வெள்ளநீரால் சூழப்பட்டுப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு:
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாகப் பலி விபரம்:
காக்ஸ் பஜார் மாவட்டம்: 28 பேர் பலி.
சட்டோகிராம் பகுதி: 13 பேர் பலி.
பந்தர்பன் பகுதி: 6 பேர் பலி.
பலியானவர்களில் பெரும்பாலோர் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆவர். மேலும், சிட்டகாங்க் மாகாணத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)








