» செய்திகள் » உலகம்
ரஷ்யாவில் பகவத்கீதைக்கு தடை விதிக்கும் வரை ஓயப்போவதில்லை : போராட்டக்காரர்கள் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜனவரி 2012 10:17:24 AM (IST)
சமூக அமைப்பில் பிரிவினையை தூண்டும் வகையில் இஸ்கான் அமைப்பால் வெளியிடப்பட்ட பகவத் கீதைக்கு தடை விதிக்கும் வரை ஓயப்போவதில்லை ஓயப்போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் டோம்ஸ்க் நகரில் பகவத் கீதைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய புதன்கிழமை வரை அனுமதியும் அளித்திருந்தது.
இந்நிலையில் டோம்ஸ்க் நீதிமன்றத்தில் நேற்று வரை மேல்முறையீடு செய்யப்படவில்லை. டோம்ஸ்க் நீதிமன்றத்தைவிட மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து பகவதக் கீதைக்கு தடை வாங்கியே தீருவோம் என்று கிறிஸ்டியன் சர்ச் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பகவத் கீதைக்கு தடையா? என பொங்கியெழுந்த இந்து அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து சாதகமாக தீர்ப்பை பெற்றுத் தந்தார். இருபபினும் பிரச்சினை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குர் ஆன் எரித்ததாக புகார்: ஆப்கானில் அமெரிக்க ராணுவ தளம் முன்பு பொதுமக்கள் போராட்டம்!!
புதன் 22, பிப்ரவரி 2012 12:27:45 PM (IST)

நீண்டநாள் உயிர் வாழ கைகொடுக்கும் உண்ணாவிரதம்: புதிய ஆய்வு தகவல்!!
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 4:26:17 PM (IST)

பலுசிஸ்தான் தனிநாடு அமைக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் : பாகிஸ்தான் அதிர்ச்சி!!
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 3:31:30 PM (IST)

இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற கப்பல் பாதுகாவலர்கள் கைது: இத்தாலி கண்டனம்!!
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 11:07:18 AM (IST)

பனி படலத்தை சேர்க்க கூடாது: எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா!!
திங்கள் 20, பிப்ரவரி 2012 5:56:55 PM (IST)

பெண்ணுக்கு 7.4 கிலோ எடையில் குழந்தை பிறந்தது: சீனாவில் சாதணை - டாக்டர்கள் வியப்பு!
திங்கள் 20, பிப்ரவரி 2012 3:29:11 PM (IST)



இந்தியன்சனி 28, ஜனவரி 2012 - 06:52:54 PM | Posted IP 117.2*****