» செய்திகள் » வெளிநாடு

Share

ஈராக்கி‌லிருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் மாதம் வெளியேறும்: அதிபர் ஒபாமா அறிவிப்பு!

புதன் 10, மார்ச் 2010 10:21:10 AM (IST)

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க இராணுவ வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31ஆ‌ம் தேதிக்குள் திரும்பப் பெறப்படுவார்கள் எ‌‌ன்று அமெரிக்க அ‌திப‌ர் ஒபாமா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அமெரிக்க அ‌திப‌ர் ஒபாமா கூறுகை‌யி‌ல், வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே ஈராக்கில் தேர்தல் நடந்தது ஒரு மைல் கல் ஆகும். தற்போது தேர்தல் நடந்து உள்ளதால், ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேறி விடும் என்று நான் கருதுகிறேன்.

எனவே அங்கு யுத்த களத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க இராணுவ வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31ஆ‌ம் தேதிக்குள் திரும்பப் பெறப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்பப் பெறப்படுவார்கள். எனினும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும் எ‌ன்று ஒபாமா கூறினார்.

இது குறித்து ஈராக்குக்கான அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ராய் ஒடியர்னோ டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் மட்டும் அடுத்த ஆண்டுவரை ஈராக்கில் இருப்பார்கள் என்று தெரிவித்‌து‌ள்ளா‌ர்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads