» செய்திகள் » வெளிநாடு
Share
இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் பலர் அரசு படைகளிடம் சரணடைந்தனர். இச்சண்டையின் போது சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை இலங்கை படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. புலிகளுடன் சண்டை முடிந்த பின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள லட்சக்கணக்கில் வாழும் தமிழர்களின் நிலையை ஆராய்வதற்காக ஐ.நா., பொதுச் செயலர் கொழும்பு வந்தார். தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார்.
சர்வதேச மனித உரிமை அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் படி அதிபர் ராஜபக்சேவை, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் அப்போது கேட்டு கொண்டார். இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்வதாக செய்திகள் வெளியாயின. எனவே, இது குறித்து ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் படி பான்-கி-மூன் கேட்டு கொண்டார். இதற்கு, ராஜபக்ஷே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"கடந்த மே மாதம் இலங்கையில் சண்டை முடிந்த பிறகு ராஜபக்ஷே, என்னுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் பல உறுதி மொழிகளை அளித்தார். ஆனால், இந்த உறுதி மொழியில் பாதிக்கும் விஷயங்கள் குறித்து இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. "முக்கிய வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்சே சொல்வது போல மனித உரிமை மீறல் ஏதும் நடக்கவில்லை என்பதை, நாங்கள் நம்ப முடியும்.
"எனவே, இந்த குழுவை அமைப்பது குறித்து ராஜபக்சேவுடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.நா., அரசியல் விவகாரத்துறை செயலர் லியான் பொஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்' என, பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல் விவகாரம்: ராஜபக்சேவிற்கு ஐநா பொதுச் செயலாளர் கண்டிப்பு!
புதன் 10, மார்ச் 2010 10:20:38 AM (IST)
இலங்கையில் வல்லுனர் குழுவை அமைத்து மனித உரிமை மீறல் நடந்ததா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ச அரசு சொல்வதை நம்பமுடியும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கண்டிப்புடன் கூறினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் பலர் அரசு படைகளிடம் சரணடைந்தனர். இச்சண்டையின் போது சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை இலங்கை படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. புலிகளுடன் சண்டை முடிந்த பின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள லட்சக்கணக்கில் வாழும் தமிழர்களின் நிலையை ஆராய்வதற்காக ஐ.நா., பொதுச் செயலர் கொழும்பு வந்தார். தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார்.
சர்வதேச மனித உரிமை அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் படி அதிபர் ராஜபக்சேவை, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் அப்போது கேட்டு கொண்டார். இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்வதாக செய்திகள் வெளியாயின. எனவே, இது குறித்து ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் படி பான்-கி-மூன் கேட்டு கொண்டார். இதற்கு, ராஜபக்ஷே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"கடந்த மே மாதம் இலங்கையில் சண்டை முடிந்த பிறகு ராஜபக்ஷே, என்னுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் பல உறுதி மொழிகளை அளித்தார். ஆனால், இந்த உறுதி மொழியில் பாதிக்கும் விஷயங்கள் குறித்து இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. "முக்கிய வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்சே சொல்வது போல மனித உரிமை மீறல் ஏதும் நடக்கவில்லை என்பதை, நாங்கள் நம்ப முடியும்.
"எனவே, இந்த குழுவை அமைப்பது குறித்து ராஜபக்சேவுடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.நா., அரசியல் விவகாரத்துறை செயலர் லியான் பொஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்' என, பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு: 50 பேர் பலி
வியாழன் 29, ஜூலை 2010 4:24:13 PM (IST)

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்
வியாழன் 29, ஜூலை 2010 1:05:35 PM (IST)

தாலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்: பயணிகள் பஸ் தகர்ந்து 20 பேர் பலி
புதன் 28, ஜூலை 2010 3:44:59 PM (IST)

ஆக்டோபஸ் விஷத்திலிருந்து மருந்து தயாரிப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புதன் 28, ஜூலை 2010 12:49:40 PM (IST)

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்
புதன் 28, ஜூலை 2010 12:44:53 PM (IST)

விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
புதன் 28, ஜூலை 2010 12:12:28 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பு: வட கொரியா மீது பொருளாதாரத் தடை
புதன் 28, ஜூலை 2010 10:56:38 AM (IST)

இந்து கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 இஸ்லாமியர்களுக்கு அபராதம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:54:52 PM (IST)

மின்சார இறக்குமதி: இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்பந்தம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:18:29 PM (IST)

ஓட்டப்பயிற்சி செய்தால் உடல் எடை கூடும்: பயிற்சியாளர் தகவல்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:56:56 AM (IST)

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பெங்களூரு வருகை
செவ்வாய் 27, ஜூலை 2010 11:46:31 AM (IST)

14 ஆயிரம் பேரை கொன்று குவித்த முன்னாள் சிறைத்தலைவருக்கு 35 ஆண்டு ஜெயில்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:19:36 AM (IST)

