» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை முல்லைத் தீவில் சுனாமி வந்து விட்டதாக பீதி; கடல் சீற்றம்; கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது!

செவ்வாய் 27, டிசம்பர் 2011 2:00:26 PM (IST)

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது இலங்கைக்கு மிக அருகில் உள்ளது. இதனால் இலங்கை வடக்கில் கடலோரப்பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத் தீவில் நேற்று இரவு 9 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டது.
 
கடல் தண்ணீர் பொங்கி எழுந்து ஊருக்குள் புகுந்தது. செம்மலை, கள்ளப்பாடு, அலம்பில், உடப்புக்குளம் உள்பட ஏராளமான கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்தது. கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான படகுகள் கடல் சீற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.   கடல் தண்ணீர் பொங்கி வந்ததால் மீண்டும் சுனாமி வந்து விட்டதாக ஈழத்தமிழர்களிடம் பீதி ஏற்பட்டது.
 
இதனால் அவர்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவசரம், அவசரமாக வெளியேறினார்கள். பாதுகாப்பான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். சில ஊர்களில் முழங்கால் அளவுக்கு கடல் தண்ணீர் தேங்கியுள்ளது. சுனாமி ஏற்பட்ட 7-வது ஆண்டு நிறைவு நாளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டதால் முல்லைத்தீவு மக்களிடம் பதற்றமும், பரபரப்பும் விடிய, விடிய நீடித்தது.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory