» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மெக்சிகோவில் லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 41 பேர் உயிரிழப்பு
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:19:55 AM (IST)

மெக்சிகோவில் லாரி மீது மோதியத்தில் பேருந்து தீப்பற்றிய விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 7பேர் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் 7பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரிக்கை: அமெரிக்க நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீடு!
சனி 22, மார்ச் 2025 5:38:27 PM (IST)

அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்!
சனி 22, மார்ச் 2025 11:00:16 AM (IST)

அமெரிக்க அரசின் கல்வித்துறை கலைப்பு: அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!
வெள்ளி 21, மார்ச் 2025 11:15:31 AM (IST)

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: இந்திய வம்சாவளி நபர் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 4:17:52 PM (IST)

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்புதல் : வெள்ளை மாளிகை அறிவிப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:31:13 AM (IST)

ஜோ பைடன் நிர்வாகத்தால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தாமதம் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு
புதன் 19, மார்ச் 2025 5:33:03 PM (IST)
