» செய்திகள் » வெளிநாடு

Share

விமான நிலையத்தில் ஸ்கேன் செய்ய எதிர்ப்பு: பாகிஸ்தான் எம்பிக்கள் அமெரிக்க பயணம் ரத்து!

செவ்வாய் 9, மார்ச் 2010 10:23:50 AM (IST)

அமெரிக்க விமான நிலையத்தில் முழு உடல் ஸ்கேன் செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியதால் அதற்கு மறுப்பு தெரிவித்து, பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர் பாகிஸ்தான் எம்பிக்கள்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாஸ் கான் அப்ரிடி தலைமையிலான எம்பிக்கள் குழு, 15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றது. டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவர்களிடம், விமான நிலைய அதிகாரிகள் முழு உடல் ஸ்கேன் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். இதை ஏற்க மறுத்த எம்பிக்கள் குழு, பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினர்.

இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு எவ்வித பாகுபாடும் காட்டப்படமாட்டாது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை அவர்கள் மீறி விட்டனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்’’ என்றார்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க, நாட்டுக்கு வரும் வெளிநாட்ட வர்களை முழு உடல் ஸ்கேன் செய்த பிறகே அனுமதிக்கிறது அமெரிக்க அரசு. இந்த கட்டுப்பாடு, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்ஜீரியா, லெபனான், லிபியா, ஈராக், நைஜீரியா, சவுதி அரேபியா, சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பொருந்தும்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads