» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமியை நோக்கி வரும் ரஷியா விண்கலம்...ஆபத்து இல்லை என அறிவிப்பு

சனி 17, டிசம்பர் 2011 6:45:35 PM (IST)

சந்திரனின் ஆராய்ச்சிக்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள அந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதை தொடர்ந்து பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்ததை விட்டதாக கூறப்படுகிறது.

பூமியின் உட் காற்று பாதைக்குள் விண்கலம் நுழையும் போது அது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவற்றின் துண்டுகள் வருகிற ஜனவரி மாதம் 6 முதல் 19-ந்தேதிக்குள் பூமியில் மோதும் என ரஷியாவின் விண்வெளி மையத்தால்  எதிர் பார்க்கப்படுகிறது. 
 
பூமியை நெருங்கும் போது விண்கலத்தின் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள், மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory