» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு : வாகா எல்லையில் ஒப்படைப்பு!
செவ்வாய் 21, ஜூன் 2022 5:24:55 PM (IST)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டு வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது.
கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரிகையாளர்களின் கருத்துக்காக கைது செய்யக்கூடாது: ஐ.நா. கண்டனம்
புதன் 29, ஜூன் 2022 5:57:20 PM (IST)

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகள் உறுதிமொழி
புதன் 29, ஜூன் 2022 8:35:08 AM (IST)

சுற்றுச்சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி: ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை
செவ்வாய் 28, ஜூன் 2022 8:33:02 AM (IST)

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்!
திங்கள் 27, ஜூன் 2022 11:58:36 AM (IST)

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!
சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST)

ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,100ஆக உயர்வு: 1,600 பேர் படுகாயம்
வெள்ளி 24, ஜூன் 2022 12:54:23 PM (IST)
