» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் : தலிபான் உத்தரவு

சனி 18, செப்டம்பர் 2021 4:34:22 PM (IST)



ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்புமாறு கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், புதிய அரசை அமைத்துள்ள நிலையில், தலிபான் அரசின் கல்வித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை, முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.  அந்த அறிக்கையில், மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்புமாறு கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவிகள் பள்ளிக்கு வருவது குறித்தோ, வயது கட்டுப்பாடு குறித்தோ தெரிவிக்கப்படவில்லை. 

இதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியை தலிபான்கள் மறுக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. முன்னதாக, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வர தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, இன்னும் பல மாகாணங்களில் பெண்கள் தங்களது பணிக்குத் திரும்பவில்லை. சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் மட்டும் தற்போது வரை பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory