» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்
சனி 23, ஜனவரி 2021 11:38:06 AM (IST)
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் பிரிட்டன் போரிஸ் ஜான்சன், "தென்கிழக்கில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் அதிக அளவு இறப்பு ஏற்படுத்துவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் உள்ளன” என்றார்.
மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த போரிஸ் ஜாசன், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதாக கூறினார். இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா உலகம் முழுவதும் சீனா உள்பட சுமார் 60 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிக்கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 8:49:38 AM (IST)

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை
வியாழன் 25, பிப்ரவரி 2021 9:04:05 AM (IST)

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து: விமானியின் சாதுரியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்
திங்கள் 22, பிப்ரவரி 2021 9:03:54 AM (IST)

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது நாசாவின் ரோவர் : அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
சனி 20, பிப்ரவரி 2021 9:02:02 AM (IST)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு: 34 லட்சம் மக்கள் தவிப்பு
வியாழன் 18, பிப்ரவரி 2021 12:01:01 PM (IST)

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு: அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 9:02:17 AM (IST)
