» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:01:06 PM (IST)
கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் அமெரிக்க பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள கேரளாவில், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் உள்ள அணைகள் பெரும்பாலானவை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அனைத்து அணைகளிலும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 10:37:44 AM (IST)

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் : பாகிஸ்தான் கருத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:34:22 PM (IST)

இந்திய தேசியக் கொடியுடன் மாணவர்கள் நடனம்; பாகிஸ்தானில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:27:05 AM (IST)

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ஜப்பான் பரிந்துரை
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:22:19 AM (IST)
