» செய்திகள் » இந்தியா

Share

விசாரணையின்போது கைதியை அடித்து கொன்ற நீதிபதி

செவ்வாய் 27, ஜூலை 2010 7:22:49 PM (IST)

உத்தரபிரதேசம் மாநிலம் பாஸ்தியில் துணை கலெக்டர் மற்றும் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக (நீதிபதி) இருப்பவர் சதீஷ்குமார் வைசியா. இவர் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டிருந்தார். இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் லாவன் பாண்டே (வயது 55).
 
அவரிடம் சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். லாவன்பாண்டே சொன்ன பதில் சதீஷ்குமாரை கோபம் அடைய செய்தது. ஆத்திரம் அடைந்த அவர் லாவன்பாண்டேவை அடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்து கோர்ட்டு வளாகத்திலேயே உயிர் இழந்தார்.
 
உடனே அவருடைய உதவியாளர்கள் கோர்ட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கொலை வழக்குக்கு பதில் இயற்கைக்கு மாறான சாவு என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
உள்ளூர் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர்சிங் மற்றும் வக்கீல்கள் அங்கு விரைந்து வந்து நீதிபதி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


மேலும் தொடரும் செய்திகள்

இறந்த தாயின் உடலுடன் 4மாதம் வசித்த பெண்.

திங்கள் 6, செப்டம்பர் 2010 5:10:53 PM (IST)

Sponsored Ads