» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு

திங்கள் 6, அக்டோபர் 2025 12:56:48 PM (IST)

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தலகட்டாபுராவில் உள்ள அவலஹள்ளியைச் சேர்ந்தவர் நவ்யா(28). இவரது கணவர் சைலேஷ். என்ஜினீயரான சைலேசுக்கும், நவ்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. திருமணமான சிறிது காலம் 2 பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

திருமணத்தின்போது சைலேஷ் கேட்ட வரதட்சணையை நவ்யாவின் பெற்றோர் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நவ்யாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு வற்புறுத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்றும் நவ்யாவிடம் வரதட்சணை குறித்து கேட்டு சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நவ்யா வீட்டில் இருந்த படுக்கை அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிய அவரை சைலேஷ் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த நவ்யாவின் பெற்றோர், சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தலகட்டாபுரா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory