» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேனிலவு சென்ற தம்பதி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் : கணவரை கொன்ற மனைவி கைது!

திங்கள் 9, ஜூன் 2025 12:10:45 PM (IST)



மேகலாயாவில் தேனிலவு சென்ற தம்பதி மாயமான சம்பவத்தில், கணவரை கூலிப்படை வைத்து கணவரை கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோனம், ராஜ் குஷ்வாஹா என்ற மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்ததைக் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், சோனமின் தந்தை, காவல்துறையினரின் கூற்றுகளை நிராகரித்து, மேகாலயா காவல்துறை இந்த வழக்கை ஜோடிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருவதாகவும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory